தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இந்த சின்னம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

புயல் இதுவரை இல்லாத வகையில் அசாதாரண வகையில் நகர்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications