கடலூர், நாகை, புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு குறைப்பு
கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலூர்: நாடா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன. தற்போது புயல் வலுவிழந்து காணப்படுவதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலில் புயல் உருவானதும் கடற்கரையை ஒட்டியுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இது, கடலில் வரும் படகு மற்றும் கப்பல்களுக்கு சமிக்ஞை தரும் வகையில் ஏற்றப்படுகிறது. புயலின் தீவிரம், எந்த திசையில் கடக்கும் என்பது குறித்து, அந்தந்த துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டைப் பொருத்து கண்டறியலாம்.

இந்த நிலையில் புதுச்சேரி அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலையில் வேதாரண்யம் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின் கூறியுள்ளார்.
இதனிடையே நடா புயல் வலுவிழந்ததை அடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் 5 ஆக இருந்த புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டது.
கடலூர் துறை முகத்தில் ஏற்றப்பட்டிருந்த 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு புயல் வலுவிழந்ததை அடுத்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications