கடலூர், நாகை, புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு குறைப்பு
கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலூர்: நாடா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டிருந்தன. தற்போது புயல் வலுவிழந்து காணப்படுவதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு குறைக்கப்பட்டுள்ளது.
கடலில் புயல் உருவானதும் கடற்கரையை ஒட்டியுள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். இது, கடலில் வரும் படகு மற்றும் கப்பல்களுக்கு சமிக்ஞை தரும் வகையில் ஏற்றப்படுகிறது. புயலின் தீவிரம், எந்த திசையில் கடக்கும் என்பது குறித்து, அந்தந்த துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டைப் பொருத்து கண்டறியலாம்.

இந்த நிலையில் புதுச்சேரி அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலையில் வேதாரண்யம் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின் கூறியுள்ளார்.
இதனிடையே நடா புயல் வலுவிழந்ததை அடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் காரைக்கால் துறைமுகத்தில் 5 ஆக இருந்த புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக மாற்றப்பட்டது.
கடலூர் துறை முகத்தில் ஏற்றப்பட்டிருந்த 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு புயல் வலுவிழந்ததை அடுத்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications