தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம் - சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் அணி அணியாக சென்னைக்கு வருகின்றனர். ரயிலில் மட்டுமின்றி பேருந்து, கார்களிலும் மாணவர்கள் வந்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் தொடங்கி, மதுரை, கோவை, நெல்லை, சென்னை என போராட்டம் மிகப்பெரிய அளவில் பற்றி பரவி வருகிறது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் மெரீனா கடற்கரையில் திரண்டு, மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகரான சென்னையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கடற்கரையில் நடைபெறும் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஐடி நிறுவன ஊழியர்களும் பல்லாயிரக்கணக்கில் பேரணியாக வந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியும், இளைஞர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை.
இதனையடுத்து 14 பேருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார் என்று தெரிகிறது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களை விட வியாழக்கிழமை முதல் சென்னையில் போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் சென்னை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் ரயிலில் மட்டுமின்றி பேருந்து, கார்களிலும் படை திரண்டு வந்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications