என்ன ஒரு ஒற்றுமை.. மோடி வந்த அதே நாளில் சூரப்பாவும் பதவியேற்பு!
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியேற்றார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளாக காலியாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கன்னடரான சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

காவிரி விவகாரம் நடைபெற்று வரும் நிலையில் சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. எனினும் இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்தது.
இதுகுறித்து சூரப்பா கூறுகையில் தான் தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வேறு மாநிலங்களில் பணி செய்தபோதும் அந்த மாநில மொழியை கற்றுக் கொண்டேன். எனது நியமனம் குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி தான் கருத்து கூற விரும்பவில்லை என்பதை சூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையல் சூரப்பா இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications