தமிழக சிறைகளில் இருந்தபடியே வெளியே 'ஆளை தூக்கும்' கிரிமினல்கள்
சென்னை: தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருந்தபடியே வெளியே குற்றச்செயல்களை நடத்தி வரும் கிரிமினல்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு கொலை, கடத்தல்களை போலீசார் முன்கூட்டியே தடுத்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

160 கொலைகள் தடுப்பு
குற்றங்களை முன்கூட்டியே தடுக்க சிறை கைதிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணிப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரிமினல் கைதிகளை கண்காணித்ததன் மூலமாக தமிழகத்தில் இதுவரை 160 கொலைகள் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை புள்ளிவிவரம் கூறுகிறது.

புழல் டூ நாகப்பட்டிணம்
நாகப்பட்டிணம் பகுதியில் சமீபத்தில் பணம் கேட்டு ஐந்து தொழிலதிபர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை புழல் சிறையிலுள்ள கேப்ரியல் என்ற கிரிமினலுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்குள் இருந்தபடியே, தனது சிஷ்யர்களை வைத்து ஆள் கடத்தலில் ஈடுபடுவது கேப்ரியல் வழக்கமாம். கடத்தல் பணத்தை கேப்ரியலின் குடும்பத்தாருக்கு அடியாட்கள் பகிர்ந்து கொடுத்துவிடுவார்களாம்.

உள்ளே, வெளியே கண்காணிப்பு
மேற்கண்ட ஐந்து கடத்தல்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. இதுபோன்றவர்களால்தான் கேப்ரியலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முடிவதில்லை. ஜெயலலிதா பேரவையில்பேசும்போது "கிரிமினல்களை கண்காணிக்க தமிழகத்தில் தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. சிறைக்கு உள்ளேயோ அல்லது ஜாமீனில் வெளியேயோ, எங்கிருந்தாலும் கிரிமினல்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

பல குற்றங்கள் தடுப்பு
இந்த கண்காணிப்பின் மூலமாக, கொலை, ஆள்கடத்தல் போன்றவை தடுக்கப்படுகின்றன. சட்ட விரோத பணத்தை பெருமளவுக்கு மீட்டுள்ளோம். 160 கொலை முயற்சி, 98 வேலைவாய்ப்பு மோசடி, 520 போதை மருந்து கடத்தல் மற்றும் ஆள்கடத்தல், 440 வெடிமருந்து கடத்தல், 2014 கள்ள நோட்டு புழக்க முயற்சி தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications