மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்...ஆதரவு கோரி கனிமொழியுடன் தெலுங்கு தேச எம்.பி.க்கள் சந்திப்பு
தெலுங்குதேசம் கட்சியின் எம்.பிக்கள் குழு இன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தனர்.
Recommended Video

சென்னை: மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தரக் கோரி திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை தெலுங்குதேச எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்து வலியுறுத்தியது.
தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும்; சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதை முந்தைய மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்குதேசம் இதை தொடர்ந்து வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை தற்போதைய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசை தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் மாநில கட்சிகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தெலுங்குதேசம் கட்சியின் வேண்டுகோள். இந்த நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் மற்றும் முரளி மோகன் ஆகியோர் அடங்கிய குழு சென்னையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தனர். அப்போது ஆந்திராவுக்கு உரிய நீதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதம் கனிமொழியிடம் கொடுக்கப்பட்டது.
TDP MPs CM Ramesh, TG Venkatesh and Murali Mohan met DMK MP Kanimozhi in #Chennai today and handed over TDP President & Andhra Pradesh CM N.Chandrababu Naidu’s letter seeking cooperation and support for TDP’s fight against the centre for justice to the state. pic.twitter.com/TvMjhPhcHZ
— ANI (@ANI) July 16, 2018
ஏற்கனவே தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார். தற்போது ஆந்திரா எம்.பி.க்கள் குழு கனிமொழியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி!












Click it and Unblock the Notifications