வள்ளியூரில் போலீசார் தாக்கியதாக கூறி பூச்சி மருந்து குடித்த விவசாயி உயிரிழப்பு.. உறவினர்கள் புகார்
பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

நெல்லை: வள்ளியூரில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியை போலீசார் தாக்கியதால்தான் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலுள்ள வள்ளியூரில், உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த விவசாயி சக்திவேலிடத்திலும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சக்திவேல் மது அருந்தியிருந்ததாகவும், அதனால் போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பூச்சிகொல்லி மருந்து குடித்து சக்திவேல் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக சக்திவேலை ஏர்வாடி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். "என்னை போலீசார் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் பூச்சிமருந்து சாப்பிட்டேன்" என்று சக்திவேல் சிகிச்சையின்போது மருத்துவமனையில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சக்திவேல் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதாலேயே சக்திவேல் இறந்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications