நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாத கையாலாகாத எடப்பாடி அரசு.. திருநாவுக்கரசர் அட்டாக்
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு சரியில்லை. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன. சென்னை பிராட்வேயில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கைதுக்கு கண்டனம்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீட் தேர்விற்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றே அவர் கைது செய்யப்பட்டார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

கையாலாகாத அரசு
காவல் துறையை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இப்படிச் செய்து தவறு. அவர் செயல்படும் விதம் அவருக்கும், இந்த அரசுக்கு நல்லப் பெயரைப் பெற்றுத் தராது.
அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. 88ஆயிரம் கோடி பணம் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.

மத்திய அரசுக்கு அடிமையாக..
எதையும் பெற முடியாத, கையாலாகாத அரசாக மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசாக, அடிமை அரசாக எடப்பாடி அரசு செயலற்றுக் கிடக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது.

தொடரும் போராட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். மாநில அரசு அதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications