கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
பழநி: கொடைக்கானல் தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதில் கணவரைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவரது சகோதரர் மணிகண்டன். இவர்களது நிலத்தில் சுப்பிரமணி வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டை மணிகண்டன் தனக்கு வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி, வீடு கட்டுவதற்குச் செலவான ரூ. 7 லட்சத்தைக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், சுப்பிரமணியின் குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுப்பிரமணி, அவரது மனைவி கௌசல்யா (34), மகள்கள் ஜனனி (17), இலக்கியா (14) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் பேருந்து நிலையம் பின்புறம் பிலிஸ்விலா பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கினர்.
திங்கள்கிழமை இரவு சுப்பிரமணி, தான் வைத்திருந்த விஷ மருந்தை குளிர்பானத்தில் கலந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் திடீரென சுப்பிரமணி தங்கியிருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து, விடுதியில் இருந்தவர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக அவர்களை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே கௌசல்யா மற்றும் மகள்கள் ஜனனி, இலக்கியா ஆகிய மூவரும் உயிரிழந்தனர். சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே இறந்த ஜனனியின் கையில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், எங்களது வீட்டை அபகரித்து, பணமும் கொடுக்காமல் ஏமாற்றிய சித்தப்பா மணிகண்டன்தான் எங்களது சாவுக்குக் காரணம் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர். கடிதத்தைக் கொடைக்கானல் போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications