சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த காவலர்கள் அதிரடி கைது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த பிஸ்வந்த் ரெட்டி. இவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த சிறப்பு படை காவலர்கள் அருள்தாஸ், இருதயராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிஸ்வந்த் ரெட்டியை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிஸ்வந்த் ரெட்டி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டார்.
இதில் காவலர்கள் 3 பேரும் பிஸ்வந்த் ரெட்டியை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது நிரூபணமானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்ய ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சிறப்பு படை காவலர்கள் அருள்தாஸ், இருதயராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே பயணிகளை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications