வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மதுரை: ‘மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வெடிக்கும்‘ என வெளிநாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு வரும் பெண் பக்தர்களை பெண் போலீசாரும், ஆண் பக்தர்களை ஆண் போலீசாரும் சோதனை செய்து உள்ளே அனுப்புகின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வெடிக்கும்‘ என மிரட்டல் வாசகம் இருந்தது.
இந்தத் தகவல் உடனடியாக மதுரை போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை போலீசாரின் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது.

தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெளிவீதிகளில் அமைந்துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வீதம் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில் நிலையத்திலும் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications