திடீர் என கேட்டை பூட்டி போராட்டத்தில் குதித்த நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் சோலார் விளக்கை உடைத்ததற்கு அபராதம் விதித்ததை கண்டித்து விடுதி மாணவர்கள் கல்லூரி வளாக கதவை அடைத்து போராட்டம் நடத்தினர்.
நெல்லை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் விலை உயர்ந்த நான்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் சமீபத்தில் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை கண்டித்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் விடுதி மட்டும் மூடப்படுவதாகவும், அபராத தொகை ரத்து செய்யப்படுவதாகவும் கூறி அன்று மாலையே விடுதி மூடப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அபராத தொகை ரூ.500 மட்டும் குறைக்கப்பட்டதாகவும், அபராத தொகையை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நிர்வாகம் கல்லூரி விடுதியை திறந்துவிட்டது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்படியும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் நேற்று மாலை கல்லூரி கேட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டு கல்லூரி உள்ளே அமர்ந்து கொண்டனர். கேட் முன் அறிவிப்பு இல்லாமல் பூட்டப்பட்டதால் உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்ல முடியவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளை உதவி கமிஷனர் செல்வம் மற்றும் பெருமாள்புரம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அபராத தொகை முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்களுக்கு விடுதியில் வழக்கம் போல் உணவு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications