சர்ச்சைக்குரிய 2 எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு தமிழக அரசு தடை!
சென்னை: ஜாதிய அடிப்படையில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய 2 எழுத்தாளர்களின் புத்தகங்களை தமிழக அரசு தடை செய்துள்ளது.
இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கெஜட் விவரம்:

வேந்தர் குலத்தின் இருப்பிடம் எது? என்ற புத்தகத்தை கே.செந்தில் மள்ளரும்
குழந்தை ராயப்பன், "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர். இந்த நூல்களை மள்ளர் மீட்புக் கழகம் மற்றும் ஆதித் தமிழர் பேரவை ஆகியவை வெளியிட்டுள்ளன.
இந்தப் புத்தகங்களில் ஜாதிகள் பற்றிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், அதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்றும் அரசு கருதுகிறது.
இதனால் இந்த புத்தகங்கள் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறுத்துள்ள செந்தில் மள்ளர், மள்ளர் மீட்புக் கழகத்தின் மாநாடு வரும் 29-ந் தேதி விருதுநகர் அருகே சாத்தூரில் நடைபெற உள்ளது. இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மள்ளர்- மீண்டும் பாடிய வரலாறு என்ற செந்தில் மள்ளரின் நூல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications