மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லும் டிடிவி. தினகரன், முதலில் எங்கே இருக்கிறார் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

உதகைமண்டலம் : மார்ச் மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லும் டிடிவி. தினகரன், முதலில் எங்கே இருக்கிறார் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகமண்டலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு எப்போதும் நிறைவேறாது. இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது கட்சியையும் அழிக்க முடியாது,எங்களிடம் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாதத்தில் ஒற்றுமையாக இருந்து இதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லி ஓய்ந்துவிட்டார். இப்போது ஹவாலா முறையில் வெற்றி பெற்றுள்ள டிடிவி. தினகரன் ஒரு விஷயத்தை இப்போது சொல்லி வருகிறார். மார்ச் மாதத்திற்குள் ஆட்சி இருக்காது என்று 'நீ இருந்தால் தானே ஆட்சியை கலைப்ப, நீயே எங்க இருக்குறன்னு பாத்துக்கலாம்" ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைத்தால் கெட்டுத் தான் போவார்கள்.

கட்டிக்காக்கப்பட்ட இயக்கம்
ஏனென்றால் அதிமுக என்பது பலரும் உயிர்த்தியாகம் செய்து தொடங்கிய கட்சி. 1972 முதல் 2017 வரை பலர் சிறை சென்று அதிமுகவை கட்டிக் காத்திருக்கின்றனர். அப்படி கட்டிக்காத்த நினைக்க இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெ. பிறந்தநாளில் ஸ்கூட்டர் மானியம்
2018ம் ஆண்டு பிப்ரவரி 24ல் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது ஸ்கூட்டர் மானிய விலையில் வாங்குவதற்கான தொகை அளிக்கப்படும். 1 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் அன்றைய தினம் வழங்கப்படும்.

அன்புமணிக்கு பதிலடி
தைப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வழங்கும் பொங்கல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் அதிமுகவை விமர்சித்துள்ளார். அதிமுக ஐசியூவில் இருப்பதாக அன்புமணி கூறினார்,அவர் டாக்டர் என்பதால் அவர் கண்ணுக்கு அப்படித் தான் தெரியும்.

முதலில் நீங்கள் திருந்துங்கள்
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் அன்புமணி ராமதாஸ் முதலில் தன் மீது இருக்கும் சிபிஐ தொடர்ந்திருக்கும் ஊழல் கரையை துடைக்க வேண்டும். அதற்குப் பின் சொன்னால் சரியாக இருக்கும், முதலில் அவர் திருந்தட்டும், அதன் பிறகு மற்றவர்களுக்கு அன்புமணி அட்வைஸ் செய்யட்டும் என்று முதல்வர் பழனிசாமி அன்புமணி ராமதாசிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications