என்னது 33 மாவட்டங்களா? கல்வித்துறையின் அலட்சிய லிஸ்ட்..இப்படித் தான் பேப்பரும் திருத்திருப்பாங்களோ?
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட +2 பொதுத் தேர்வு முடிவுகள் ரேங்க் முறையின்றி வெளியிடப்பட்டது அனைவராலும் உற்று நோக்கப்பட்ட நிலையில் மாவட்ட பட்டியல் தயாரிப்பதில் பள்ளிகல்வி அதிகாரிகள் அலட்சியம்.
சென்னை : தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் மாவட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் என அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் டிபிஐ வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த பள்ளிகல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவுகள் ரேங்க் முறையில் கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால், மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதப் பட்டியலை அரசு வெளியிட்டிருந்தது.
தேர்வு முடிவுகள் வெளியான பரபரப்பில் இருந்தவர்களுக்கு தொடக்கம் முதலே சந்தேகத்தை ஏற்படுத்தியது தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் என்பதாகவே இருந்தது. ஏனெனில் தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பள்ளிக் கல்வித் துறை அளித்த பட்டியலில் 33 மாவட்டங்கள் என்று இருந்தது.

விவாதத்திற்கு வித்திட்ட லிஸ்ட்
இதனால் பரபரப்பு சேனல்கள் கல்வி வாரியாக தமிழகத்தில் 33 மாவட்டங்கள் என்று தெரிவித்தன. ஆனால் செய்தி பரபரப்பு முடிந்த பின்னர் இந்த லிஸ்ட் சமூக ஊடகங்களில் வெளியான போது தான் அதிகாரிகளின் அலட்சியம் வெளி வந்தது. அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்ட பட்டியலில் 33 மாவட்டங்கள் இருந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

25க்கு அப்புறம் 27ஆ?
அதன் பின்னர் மாவட்ட லிஸ்ட்டை பார்த்தால் தான் தெரிகிறது எண் வரிசையில் 25க்குப் பின் 26ஐ காணவில்லை. 25ம் எண்ணிற்கு பிறகு 27 என்று அச்சிடப்பட்டள்ளதால் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையில் 33 என வந்துள்ளது.

அதிகாரிகளின் அலட்சியம்
ரேங்க் முறையில்லாமல் வெளியாகும் முதல் தேர்வு முடிவுகள் என்பதால் அதிகாரிகள் எவ்வளவு ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் முதலிலேயே கோட்டை விட்டு மாவட்டங்களின் எண்ணிக்கையில் சொதப்பியது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.

இப்படித்தான் கூட்டியிருப்பாங்களா?
தேர்வு முடிவுகளுக்கான செய்தி அறிக்கை வெளியிடுவதிலேயே இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளது அரசுத் தேர்வுகள் துறை. அப்படியானால் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாளையும் இப்படித் தான் திருத்தி மதிப்பெண் எண்ணிக்கை கூட்டுவதிலும் அலட்சியத்தை காட்டியிருக்குமோ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது அதிகாரிகளின் இந்த அலட்சிய லிஸ்ட்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications