சட்டசபை தேர்தல்: தமிழகம், புதுவையில் நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்
சென்னை: சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது.
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கும் மே 16-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது.
வேட்பாளர்கள் 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ந் தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2-ந் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு மே 16-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ந் தேதியும் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைகிறது.
இதில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதியில் போட்டியிடலாம். அதே போல் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ஒரு தொகுதியில் 4 வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அதே போன்று 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications