தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: 15 சிறப்பு டிக்கெட் கவுன்ட்டர்கள் திறப்பு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், தீபாவளிக்கு அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
இவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் 8,350 சிறப்பு பஸ்களை இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்
இந்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோயம்பேட்டில் 15 கவுண்ட்டர்கள்
பயணிகளின் நலன் கருதி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 15 சிறப்பு கவுன்ட்டர்களை போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை திறந்து வைத்தார்.
முறையாக பயன்படுத்துங்கள்
இந்த கவுன்ட்டர்களை பயணிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி,மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை உட்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மறுமார்க்கத்திலும் சிறப்புப் பேருந்துகள்
அதேபோல் மறுமார்க்கத்தில் அந்தந்த ஊர்களிலிருந்து சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான பேர் பயனடைவார்கள்.