சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதுதான் மோடியின் திட்டம்.. வெள்ளையன் காட்டம்
சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதற்காகவே பிரதமர் மோடி ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை : சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், சில்லறை வர்த்தகத்தை ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்நாடு சில்லறை வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுகுறு வணிகர்கள் கலந்து கொண்டனர்.
மோடி அரசுக்கு எதிராக முழக்கம்...
போராட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.மத்தியஅரசை கண்டித்த பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

கிலோ ரூ.20...
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை விளக்கும் வகையில் ஒரு கிலோ 5000 ரூபாய் 20 ரூபாய் என்றும், ஒரு கிலோ 1000 ரூபாய் நோட்டு 22 ரூபாய் என்றும் தராசிர் வைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சீரழிந்த சில்லறை வணிகம்
ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பால் சில்லறை வர்த்தகம் சீரழிந்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.
சில்லறை தட்டுப்பாட்டில் மக்கள்...
போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய த.வெள்ளையன் சில்லறை தட்டுப்பாட்டால் நாட்டில் 130 மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

அழிவுப்பாதையை நோக்கி பொருளாதாரம்...
அழிவுப்பாதையை நோக்கி நாட்டின் பொருளாதாரம் சென்று கொண்டிருப்பதாக கூறிய வெள்ளையன் கருப்புப்பணம் வைத்திருக்கும் பண முதலைகளை கண்டுபிடிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக தெரிவித்தார்.
வளர்ச்சி கண்ட ஆன்லைன் வர்த்தகம்...
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சில்லறை தட்டுப்பாட்டால் ஆன்லைன் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் வெள்ளையன் கூறினார்.

ஜனவரியில் நாடு தழுவிய போராட்டம்...
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் உள்நாட்டு வணிகத்தை ஒழிக்கவும் பிரதமர் மோடி முயற்சிப்பதாக கூறிய வெள்ளையன், இத்திட்டத்தைக் கண்டித்து வரும் ஜனவரியில் நாடு தழுவிய மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications