நாளை மேலூரில் முதல் பொதுக்கூட்டம்... சின்னம்மாவிடம் ஆசி பெற பெங்களூரு பறந்தார் தினகரன்
டிடிவி. தினகரன் திருச்சியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய கையோடு பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.
திருச்சி : அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள தினகரன், இன்று திருச்சியில் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு பெங்களூரு சென்றுள்ளார்.
அதிமுக மூன்றாக பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில் எஃகு கோட்டை எப்போது வீழும் என்று காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று நமது எம்ஜிஆர் நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் 3-ஆவது பெரிய இயக்கமாக உயரத்தில் உள்ள அதிமுக சிறிதளவும் கீழ் இறங்கிவிடக் கூடாது. முன்பைவிட கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்ஜிஆர் நூற்றாண்டில் உறுதியேற்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது எம்ஜிஆர் நாளேட்டில் பிரசுரமான கடிதம் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிருக்க மாமியார் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக தஞ்சாவூர் சென்ற தினகரன் சில நாட்களாக அங்கிருந்தே மேலூர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். தினகரனுக்கு துணையாக நான் நிற்பேன் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் சொன்ன நிலையில் அங்கேயே கிடையாய் கிடக்கிறார் தினகரன் என்றும் பார்க்கப்படுகிறது.

அடுத்த திருப்பம் என்ன?
கட்சியினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை மேலூர் பொதுக்கூட்டத்தில் பாருங்கள் என்று தினகரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். எனவே அடுத்த அரசியல் திருப்பம் என்னவென்று தமிழக மக்களும், அதிமுகவினரும் காத்திருக்கின்றனர்.

எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி அறிவித்தது முதல் தஞ்சாவூரில் இருந்தே பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார் தினகரன். கடந்த இரண்டு நாட்களாகவே தஞ்சாவூரில் இருந்த தினகரன், இன்று காலையில் திருச்சியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

சசிகலாவுடன் சந்திப்பு
திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தினகரன் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். நாளை மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தினகரன் நடத்தும் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தினகரன் பெங்களூரு சென்றுள்ளதால் அவர் சிறையில் சசிகலாவை சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசி பெற?
திஹார் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கட்சியில் தொடரப்போவதாக சிறையில் சசிகலாவை சந்தித்து கூறிவிட்டு வந்தார் தினகரன். ஆனால் சசிகலா பொறுத்திருக்கச் சொன்னதால் 60 நாட்கள் காத்திருந்துவிட்டு கடந்த முறை சசிகலாவை சந்தித்து கெடு முடிந்ததை சொல்லிவிட்டு புன்னகை மன்னனாக வெனிவந்தார் தினகரன். இந்நிலையில் இன்று மீண்டும் பெங்களூரு சென்றிருப்பது நிச்சயம் தனது சுற்றுப்பயணத்திற்காக ஆசி பெறத் தான் என்கின்றனர் அதிமுகவினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications