ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட் ஆலையில் அரசு குழு ஆய்வு நடத்துகிறது என்று தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று மாலை அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 2 மாதமாக இயங்கவில்லை. ஆலை வளாகத்தில் அமிலங்கள், ரசாயன பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பதாக புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வு விவரங்களை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. இக்குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் என்ன மாதிரியான கசிவு ஏற்பட்டிருக்கிறது? என்பது குறித்து இந்த குழு ஆய்வு நடத்தியது. பின்னர் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஆய்வு விவரங்களை அளித்தது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலைக்குள் கந்த அமிலக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணி நாளை காலை தொடங்கும்.
இன்று இரவு முழுவதும் ஸ்டெர்லைட் ஆலையை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். கந்த அமிலத்தை அகற்ற தேவைப்பட்டால் டேங்கர்லாரி பயன்படுத்தப்படும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications