பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது?
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது என்று பார்ப்போம்.
20142015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் தமிழகத்திற்கு என்னென்ன கிடைத்துள்ளது என்று பார்ப்போம்.

ஸ்மார்ட் சிட்டி
தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே அமைக்கப்படும் இன்டஸ்ட்ரியல் காரிடார் என்னும் நெடுஞ்சாலையில் சிறப்பு தொழில் நகரங்கள் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள தமிழகத்தின் பொன்னேரி உள்பட 3 இடங்களில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படுகிறது.

காசநோய்
காசநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க 2 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் துவங்கப்படுகிறது. இதில் ஒன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் மற்றொன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும் அமைக்கப்படுகிறது.

ஜவுளி
ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த 6 ஜவுளி குழுமங்கள் அமைக்கப்படுகிறது. அவை பரேலி, லக்னோ, சூரத், கட்ச், பகல்பூர், மைசூர் மற்றும் தமிழகத்தில் அமைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் வெளிவிட்ட துறைமுக திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக ரூ.11 ஆயிரத்து 635 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்
தேசிய புராதான நகர மேம்பாடு மற்றும் அதிகரித்தல் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பழமையான நகரங்கள் பாதுகாக்கப்படும். இத்திட்டம் முதல்கட்டமாக ரூ.200 கோடி செலவில் மதுரா, அமிர்தசரஸ், கயா, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சூரிய மின்ஒளி
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்குவிக்க அல்ட்ரா மெகா சோலார் பவர் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டம் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவை
வெள்ளம், புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க புதுச்சேரிக்கு ரூ.188 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications