இல்லாத இடத்தில் கொசுவைத் தேடும் அதிகாரிகளே... பாதிக்கப்பட்ட ஊரப்பாக்கத்தையும் கண்டுக்கங்க!
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னர் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் டெங்கு அபாயம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் : டெங்கு கொசுவைத் தேடி அபராதம் விதிக்கும் அதிகாரிகள் முறையான கழிவு நீர்ப் பாதை அமைக்காததால் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும் ஊரப்பாக்கம் பகுதியை புறக்கணிப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் இடங்கள் என்று தேடி அலைந்துஅதிகாரிகள் கொசுவை வளர்க்கும் இடம் என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் எத்தனை முறை புகார் அளித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரில் உள்ள பாரி வள்ளல் தெருவில் கழிவு நீர் வடிகால் வழி ஏற்படுத்தப்படவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவுநீர் வடிகால் வழி இல்லாததால் இந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அருகில் உள்ள காலிமனையில் சாக்கடை நீரை வெளியேற்றி வருகின்றன. இதனால் இந்தப் பகுதியே கொசு உற்பத்திக் கூடாரமாகியுள்ளது என்பது இந்தப் பகுதி மக்களின் புகார்.
தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு, மலேரியா அச்சம் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு இந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர் மக்கள். மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் கலப்பதால் தேங்கி நிற்கும்கழிவு நீரில் இருந்து பாம்பு, தேள் உள்ளிட்ட பயங்கர ஊர்வன நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதியில் வயது முதியோர், குழந்தைகள் என அனைவரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அன்றாடம் வாழ்நாளை கழிப்பதே கஷ்டமாகிவிட்டதாகவும், உயிர் வாழவே அஞ்சும் நிலையில் நாட்களை கடத்தி வருவதாகவும் இந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து உள்ளூர் பஞ்சாயத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதி மக்களை காக்க வேண்டும் என்று வாசகர் டி. கபிலன் நமக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications