கள்ளக்குறிச்சிக்கு பாமக வேட்பாளரை அறிவித்ததால் கடும் கோபத்தில் விஜயகாந்த்!
கிருஷ்ணகிரி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கு பாஜக ஒதுக்கிய கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளரை அறிவித்ததால் கோபமடைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், கிருஷ்ணகிரி பிரசாரத்தின்போது பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்காமல் பொத்தாம் பொதுவாக பேசி விட்டுப் போனார் விஜயகாந்த்.
கிருஷ்ணகிரி பாமக வேட்பாளராக ஜி.கே.மணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியையும் பாஜக, பாமகவுக்கே கொடுத்துள்ளது. முதலில் இந்தத் தொகுதியை விஜயகாந்த் கேட்டு வந்தார். ஆனால் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுவதால் இது தங்களுக்கே வேண்டும் என்று பாமக கூறி விட்டது. இதையடுத்து விஜயகாந்த் இத்தொகுதியை விட்டுக் கொடுத்தார்.
இந்த நிலையில், அதிரடியாக நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கள்ளக்குறிச்சிக்கு வேட்பாளரை அறிவித்தார். அதேபோல தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட சேலத்தில் முன்பே அறிவித்தபடி பாமக வேட்பாளராக அருளே தொடர்வார் என்றும் அறிவித்தார்.
இந்த இரு தொகுதிகளில் ஒன்றில்தான் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ராமதாஸின் பேச்சும், அறிவிப்பும், சிங்கம், சிறுநரி என்று அவர் கூறிய உவமானங்களும் விஜயகாந்த்தை கோபப்படுத்தியுள்ளதாம்.
இது நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த விஜயகாந்த்தின் தேர்தல் பிரசாரத்தின்போதும் எதிரொலித்தது. நேற்றைய பிரசாரத்தின்போது மருந்துக்குக் கூட பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கோரவில்லை. மணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் கேட்கவில்லை.
விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து...

அதிமுகதான் மக்கள் விரோத ஆட்சி
தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா சொல்கிறார். அதிமுக தான் மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டுள்ளது. அதை முடிவுக்கு கொண்டு வர மக்களாகிய உங்களால் தான் முடியும்.

ஊழலை ஒழிக்கத்தான் போராடுகிறோம்
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க நாங்கள் போராடுகிறோம். இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.

ஜெயலலிதாவிடம்தான் கருப்புப் பணம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை கொண்டு வருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். யாரிடம் கருப்பு பணம் உள்ளது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இந்தியாவில் ஊழலற்ற ஆட்சி அமைய, நரேந்திர மோடி பிரதமராக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள்.

எனக்கு சாதி கிடையாது
எனக்கு சாதி, மதம் கிடையாது. இந்தியா வல்லரசு ஆக வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தை நல்லரசு ஆள வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வெளிச்சம் வந்து விட்டதா
திமுக ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாடு இருண்டு விட்டதாக அதிமுக கூறியது. இப்போது வெளிச்சம் வந்து விட்டதா? ஜெயலலிதா பிரசாரத்திற்கு செல்லும் போது மட்டும், போலீசார் உச்சகட்ட பாதுகாப்பு வழங்குகிறார்கள். 3 கிமீ தூரத்திற்கு முன்பே சீல் வைத்துவிடுகிறார்கள். போலீசாரின் நடவடிக்கை குறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய உள்ளேன் என்றார் விஜயகாந்த்.

பாமகவுக்கு வாக்கு கேட்கவில்லை
பிரசாரத்தில் பாமகவுக்கு வாக்கு சேகரிக்க மறுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள், மோடியைப் பிரதமராக்குங்கள் என்று மட்டும் விஜயகாந்த் பேசிச் சென்றதால் கூட்டணியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நேற்றைய விஜயகாந்த் பிரசாரத்தின்போது பாமகவினரின் கொடிகளையும் காண முடியவில்லை.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை












Click it and Unblock the Notifications