ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்: தியாகி லட்சுமிகாந்தன்
நெல்லை: போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க இளைஞர்கள் ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி தெரிவித்தது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் வாக்காளர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக 90 வயதான தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி கலந்து கொண்டார்.

கலெக்டர் கருணாகரன் தலைமை ஏற்றி உறுதிமொழி வாசிக்க மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கனவே விண்ணப்பித்த மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது லட்சுமிகாந்தன் பாரதி பேசியதாவது,
சுதந்திர போராட்டத்தில் நெல்லை மாவட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நான் எங்கு போராடி சிறை சென்றேனோ அந்த மாவட்டத்திலேயே எனக்கு கலெக்டர் பணி செய்யும் வாய்ப்பு சுதந்திரத்திற்கு பின்பு கிடைத்தது. 90 வயதை கடந்த எனக்கு இருக்கும் ஒரே விருப்பம் போராடி பெற்ற சுதந்திரத்தை காக்க தேர்தலில் ஜாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை மாணவ, மாணவிகள் ஜனநாயக கடமையை மறக்காமல் செய்ய வேண்டும். மேலும் கிராமத்தினரிடம் வாக்களிக்கும் கடமையை தவறாமல் செய்ய சொல்ல வேண்டும். ஒரு நாளாவது நீங்கள் கதர் ஆடையை அணிந்து வர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகளில் பெரும்பாலானோர் கைத்தறி ஆடைகளில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தியாகியின் பேச்சு மாணவிகளிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications