நாகையில் மழை எதிரொலியாக நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த மழையின் எதிரொலியாக நீதிமன்றத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ப்பலி எதுவும் இல்லை.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி, நாகப்பட்டினம்,வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

 Wall collapsed at Nagapattinam district court due to continuous rain

இந்நிலையில் இன்று காலையில் மழையின் எதிரொலியாக நாகை மாவட்ட 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ப்பலியோ ஏற்படவில்லை.

ஏற்கனவே கோவை மாவட்டம் சோமனூரில் மழை காரணமாக பேருந்துநிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதே தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பழைய கட்டிடங்களை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்ட நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+