மின் கட்டண உயர்வால் டாஸ்மாக் கஸ்டமர்கள் அடையும் பாதிப்பை கேட்க ஆளில்லையா?
சென்னை: மதுகுடிப்போரையும் மின்கட்டண உயர்வு விட்டுவைக்கவில்லை என்பதற்கு பார் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரமே சாட்சி.
தமிழகத்தில் கடந்த 12ம் தேதி யில் இருந்து 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர குடிசை இணைப்புகள் 11.83 லட்சம், தெருவிளக்கு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் 5.82 லட்சம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் 71 ஆயிரம், தனியார் கல்வி நிறுவனங்கள் 17 ஆயிரம், விசைத்தறி நெசவாளர்கள் 1.3 லட்சம், குடிசை மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் 1.02 லட்சம், விவசாய மின் இணைப்பு 20.47 லட்சம், கோயில்கள் 89 ஆயிரம் என மொத்தம் 2.45 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மேலும், 8 ஆயிரம் உயர் மின்னழுத்த நிறுவன நுகர்வோரும் உள்ளனர்.
இதில், 11.83 லட்சம் குடிசை மின் இணைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. கைத்தறி நெசவாளர் களுக்கு 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. அதற்குமேல், வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மாதத்துக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோருக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தினால் வீட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் மது பார்கள் நிலைமையை கேட்கவா வேண்டும். அங்கு ஏற்கனவே சரக்கு விலையை கூட்டிவிட்டார்கள். இப்போது கட்டண உயர்வு வேறு. அதிர்ச்சியுள்ள மதுபான பார் ஒன்றில் சரக்குக்கு மிக்சிங் செய்ய தேவைப்படும் வாட்டர் விலையை கூட்டிவிட்டதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதை இந்த படத்தில் பார்க்கலாம்
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications