நெல்லையில் குடிநீர் நிறுவனங்கள் திடீர் ஸ்டிரைக்: நுகர்வோர்கள் அவதி
நெல்லை: பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடியில் 60க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் பல குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவர்கள் வரைமுறை இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சனையை தாமே சுயமாக எடுத்து கொண்டு வழக்கு பதிவு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம் குடிநீர் நிறுவனங்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தார். அவற்றில் பல நிறைவேற்ற முடியாதவை என்று குடிநீர் நிறுவனங்கள் நிபந்தனைகளை தளர்த்த கோரின.
இவற்றில் 252 நிறுவனங்கள் வறண்ட பகுதியில் நிலத்தடி நீரை எடுப்பதாக புகார் எழுந்தது. அந்த நிறுவனங்களுக்கு நீதிபதி தடை விதித்தார். பசுமை தீர்ப்பாய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் குடிநீர் நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் வியாழக்கிழமை மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குடிநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கபபட்டுள்ளது.
நெல்லை மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஆர்யா பாலசுப்பிரமணியன் இதுகுறித்து தெரிவிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் குடிநீர் கேன்கள் விற்பனையாகிறது. தற்போது வேலை நிறுத்தத்தில் சுமார் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டல்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் கேன் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. நிபந்தனைகளை தளர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications