அகல் விளக்கை கொடுத்துச் சென்றுள்ளார் ஜெ.. எல்ஐசி சின்னம் போல கையைக் காட்டிய ஜெயக்குமார்!
ஆட்சியை அகல் விளக்கு போன்று ஜெயலலிதா கொடுத்துச் சென்றுள்ளார் என்று கையை உயர்த்தி எல்ஐசி சின்னம் போல் காண்பித்து அசத்தினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: தமிழக அரசின் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
சரியாக காலை 10.30 மணிக்கு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் ஜெயக்குமார். பட்ஜெட் உரையைத் வாசிக்க தொடங்கிய உடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை அவர் பாடினார். அப்போது, தாலிக்கு தங்கமாய், நாங்கள் சட்டசபையில் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் நீங்கள்தானம்மா என்று ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி ஒரு கவிதை போல வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது இந்த ஆட்சியை ஒரு அகல் விளக்கு போல் எங்களுக்கு அளித்திருக்கிறார் ஜெயலலிதா என்று சொல்லும் போது, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தனது இரு கைகளையும் உயர்த்தி எல்ஐசி விளக்கு சின்னம் போல் காட்டினார்.
அதே போன்று, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிய போதும், அதிமுகவினர் கைகளை மேஜையில் தட்டும் போதும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நின்று நிதானித்து அவர்களுக்கு பதில் அளித்த சுவராஸ்யமும் நடைபெற்றது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது யார் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் பட்ஜெட் வாசிப்பார்கள்.
நிதி அமைச்சர் ஜெயக்குமார் அப்படி இல்லாமல் சில இடங்களில் ஜாலியாக பேசினார். இவர் பட்ஜெட் வாசிக்கும் போது, மேஜையை அதிமுக எம்எல்ஏ தட்டினார். அப்போது பட்ஜெட் வாசிப்பை நிறுத்திவிட்டு திரும்பி மியூசிக் போல தட்டுராரு என்று சொல்லிவிட்டு மீண்டும் பட்ஜெட்டை படிக்கத் தொடங்கினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications