அன்று வெங்கய்யா நாயுடு, இன்று ஆளுநர்... எங்கே போனது மாநில சுயாட்சி?
கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட ஆட்சியர், காவலர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பது மாநில சுயாட்சி எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை : தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஆளுநர் கோவை மாவட்ட ஆட்சியர், காவலர்களுடனான ஆய்வு கூட்டம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை மாநில சுயாட்சியை பறிக்கும் செயல் என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசு இருக்கிறது என்பதை பல்வேறு அரசியல் கட்சியினரும் பல செயல்பாடுகளை சுட்டுக்காட்டினர். எனினும் விதிமுறைகளிலேயே இல்லாத வகையில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சராக இருந்த போது தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்துள்ளது.

ஆளுநரை வைத்து மிரட்டலா?
ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இது போன்று அதிகாரிகளை சந்திப்பது, அவர்களுக்கு கட்டளையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த மாநில அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே ஏற்கனவே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பாக அதன் ஊதுகுழலாக கிரண்பேடி செயல்பட்டு வருகிறார் என்பது புதுவை முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டு.

ஏன் திடீர் ஆலோசனை
இந்நிலையில் தமிழகத்திலும் அதே நிலையைத் தான் மத்திய அரசு செய்ய நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில முதல்வர், துணை முதல்வர் இருக்கும் நிலையில் இவர்களை மீறி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆளுநர் திடீர் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இதே கேள்வி மாநில அரசுக்கும் எழுமா, இது குறித்து விளக்கம் கேட்குமா என்ற சந்தேகங்களுக்கு அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தான் பதில் சொல்லும்.

இருப்பை உணர்த்தும் பாஜக
மாநில சுயாட்சி கொள்கையில் என்றுமே சமரசம் செய்து கொள்ளாமல் இருந்தது தமிழகம். ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகான ஓராண்டில் எல்லாமே தலைகீழாகிவிட்டது. நேரடியாக தாமரை கோட்டையில் மலராத ஒரே குறை தான் மற்றபடி எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பதை அவ்வபோது நிரூபித்து வருகிறது பாஜக.

அரசின் பதில் என்ன?
இது வரை தமிழகத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்கு ஏதோ மழுப்பலான காரணங்கள் ஆட்சியாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால் ஆளுநரின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர்கள் அளிக்கப் போகும் விளக்கம் என்ன என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications