வெற்றிடத்தை நிரப்ப போவது யார்?.. ஆண்டவரா இல்லை அருணாசலமா??
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதே போல் கமல்ஹாசனும் கட்சி ஆரம்பித்துள்ளதால் வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் குறித்து பேசிய போதெல்லாம் தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத நிலை, கருணாநிதி செயல்படாத நிலை ஆகியவற்றாலேயே இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று பேசப்பட்டது.
இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் கடந்த மாதம் கட்சி ஆரம்பித்தார். இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிகாந்த் நேற்று மாலை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் விழாவில் கலந்து கொண்டார்.

அதான் வருகிறேன்
அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதால் வருகிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். ஆமாயா வெற்றிடம் இருக்கிறது. அதனால் வருகிறேன் என்றார்.

கூட்டணி
கமலும், ரஜினியும் நண்பர்கள் என்றாலும் இருவரது அரசியலும் வெவ்வேறு திசையில் பயணிக்க கூடிய வகையில் உள்ளது. இருவரும் கூட்டணி வைப்பார்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியுள்ளனர்.

மாஸ் ஹீரோஸ்
ரஜினியும் கமலும் மாஸ் ஹீரோஸ். இருவரும் கட்சி ஆரம்பித்தாலும் யார் ஜொலிப்பார்கள் என்பது சினிமாவை போல் மக்கள் கையில் உள்ளது. இவர்களது கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றை பார்த்தே மக்கள் மதிப்பிடுவர்.

யார் நிரப்புவது
அப்போதுதான் தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப போவது ரஜினியா கமலா என்பது தெரியவரும். அதற்கு அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலோ, மக்களவை தேர்தலோ, சட்டசபை தேர்தலோ கை கொடுக்கும். அதில் மக்கள் மனதை கவர்பவர்கள் யார் என்று தெரியவரும். அந்த நேரத்தில் நல்ல தலைவனை மக்கள் தேர்ந்தெடுப்பர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications