மே டூ டிசம்பர்... பாஜகவின் நெருக்கடியால் ஆறப்போட்டு முடிவை சொல்கிறாரா ரஜினி?
மே மாதமே அரசியல் அறிவிப்பை வெளியிட வேண்டிய ரஜினி தாமதமாக தன்னுடைய முடிவை அறிவிக்க பாஜகவின் நெருக்கடி தான் காரணமா?
Recommended Video

சென்னை : கடந்த மே மாதமே ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியை பாஜகவுடன் சேருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது பாஜக. இதனால் விஷயத்தை ஆரப்போட்ட ரஜினி டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களின் பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறியது 2017ல் தான். அப்போது தான் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு பொறியை தட்டி விட்டார் ரஜினிகாந்த். போருக்குத் தயாராக இருங்கள் நேரம் வரும்போது சொல்கிறேன் என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார்.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் அறிவிப்பார் என்று ரசிகர்கள், மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. ரஜினியின் அரசியல் பேச்சுகள் பரபரப்பாக பேசப்பட்டதால் பாஜக ரஜினியை தன் வசம் இழுக்க முயற்சிகள் செய்தது.

பாஜக திட்டம்
பாஜகவிற்கு தொடர்ந்து தமிழகத்தில் நல்லபெயர் இல்லை. பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு பிரபலமான மக்கள் செல்வாக்கு உள்ள நபர் தேவை என்று பாஜக கருதியது. ரஜினியின் நிதானம், ஆன்மீக சிந்தனைகள் அனைத்தும் பாஜகவிற்கு பொருந்துவதால் ரஜினியை தங்கள் வசம் இழுக்க பாஜக திட்டம் போட்டது.

அமித்ஷா நேரடி அழைப்பு
இதனால் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்றார். பிரதமர் மோடியும், ரஜினியும் நண்பர்கள் எனவே அவர் பாஜகவுடன் சேர்வது உறுதி என்ற ரீதியில் ரஜினிக்கு மறைமுகமாக அப்போது அழுத்தங்களும் தரப்பட்டன.

கமலின் மாற்று அரசியல்
மற்றொரு புறம் நடிகர் கமல்ஹாசன் பாஜகவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குவது போன்ற நிலைப்பாடும் நிலவுகிறது. அரசியலுக்கு வந்துவிட்டதாக சொன்ன கமல் பாஜகவுடன் எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கும் உம்மன்சாண்டி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்தார்.

ஆறப்போட்ட ரஜினி
இதனால் தனது அரசியல் அறிவிப்பை தள்ளிப் போட்ட ரஜினி. ஒரு வழியாக டிசம்பர் 31ல் அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லி இருக்கிறார். பாஜகவின் நெருக்குதல் காரணமாகவே தன்னுடைய அரசியல் அறிவிப்பை ரஜினி தள்ளிப்போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை அவர் வெளியிடப் போகும் அறிவிப்பில் தான் அவருடைய அரசியல் வியூகம் எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்போகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications