ஒ.பி.எஸ்.ஸின் சென்னை வீட்டுக்கும், உயிருக்கும் ஆபத்து.. போலீஸ் பாதுகாக்குமா?
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது தங்கியிருக்கும் வீட்டிலிருந்து அதிமுகவினரால் துரத்தப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துளளது
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசித்து வரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்திலிருந்து அவரை அதிமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். அமைச்சராக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும் இதே வீட்டில்தான் கடந்த பல ஆண்டுகளாக மேலாக வசித்து வருகிறார். சென்னையில் அவருக்கு வேறு வீடு இருப்பதாக தெரியவில்லை.

சசிகலாவிற்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய பின்னர் ஓபிஎஸ் வீடு முன்பாக தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து வந்தனர். கடந்த 10 நாட்ள் அரசியல் சலசலப்புக்குப் பின்னர் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
இந்த அமைச்சரவையில் சசிகலாவிற்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பிய ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் இடம் பெறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற உடனேயே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இருந்த காரில் சுழல் விளக்கு அகற்றப்பட்டது. அரசு லட்சினையும் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது.
அவர் தற்போது அமைச்சராக இல்லை, அதனால் அமைச்சர்கள் குடியிருப்பில் அவர் வசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் 3முறை முதல்வராக இருந்திருப்பதால் அமைச்சர்கள் குடியிருப்பில் வசிக்க எந்த தடையும் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவினர் அதை அனுமதிப்பார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் அவரது வீட்டைக் குறி வைநத்து இன்று நடந்த மிகப் பெரிய தாக்குதல். சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சுற்றிலும் இருக்க ஓ.பன்னீர் செல்வத்தால் இந்த வீட்டில் தொடர்ந்து வசிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications