மவுலிவாக்கம் கட்டட விபத்து- முன்ஜாமீன் கோரும் பெண் ஆர்க்கிடெக்ட்
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்தில் பெண் ஆர்க்கிடெக்ட் ஒருவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
27 வயதான சுகன்யா பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருஸ்டிகோன் கட்டிடக்கலை நிறுவனத்தில் கட்டிடக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறேன். மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

இந்த கட்டிடத்தை வடிவமைத்து திட்டம் உருவாக்கிய குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன். இதில், என்னுடைய பங்கு மிகவும் குறைவானது. கட்டிடத்தில் அஸ்திவாரத்தின் ஆழம், உறுதித்தன்மை உள்ளிட்ட பணிகளை கட்டிடத்தை கட்டும் என்ஜினீயர்கள்தான் மேற்கொள்ளவேண்டும். இந்த பணிக்கும், கட்டிடக்கலை நிபுணர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கட்டிடம் இடிந்த சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவும் இல்லை. நான் ஒரு அப்பாவி. ஆனால், இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்ய தேடிவருகின்றனர். எனவே எனக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications