தீர்ப்பு வழங்க லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சஸ்பெண்ட்
சென்னை: ஊழல் முறைகேடு புகார் காரணமாக பதவி உயர்வு பெறும் நாளில் திருவொற்றியூர் பெண் மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் நீதிபதியின் பெயர் ஜெயசூர்யா என்பதாகும். இவர் சென்னை திருவொற்றியூர், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் மீது நடுவர் நீதிமன்றப் பதிவேடுகளில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மாவட்ட நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி ஆகியோரிடம் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி பவதாரணி ஆகியோர் திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு ஜெயசூர்யா மீது பல்வேறு முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருப்பதை தெரிந்து கொண்டனர்.
வழக்கு நடவடிக்கையில் முறைகேடு செய்தல், தண்டனை பெற்றவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத்தை முறையாக கருவூலத்தில் கட்டாதது உள்ளிட்டவற்றை கண்டு பிடித்தனர். நீதிமன்ற பதிவேடுகளையும் சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ஜெயசூர்யாவை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து இரு நீதிபதிகளும் உத்தரவிட்டனர்.
திருவொற்றியூர் நீதிமன்ற பொறுப்பு தற்காலிகமாக பூந்தமல்லி மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயசூர்யா பதவி உயர்வு பெற இருந்த நாளில் ஊழல் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications