காதலுக்காக பெற்ற தாய் தந்தையருக்கு உணவில் மயக்க மருந்து... மிலிட்டரிகாரருடன் கம்பி நீட்டிய இளம்பெண்
காதலுக்காக பெற்ற தாய் தந்தையருக்கு உணவில் மயக்க மருந்தை கொடுத்துவிட்டு இளம்பெண் காதலுடன் வீட்டை விட்டு ஓடினார்.
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோருக்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு காதலனுடன் இளம்பெண் தப்பித்து ஓடினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த முக்குறும்பை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களது மகள் திவ்யா. பி.ஏ மாணவியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் விஜயராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

விஜயராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது காதல்ஜோடியினர் சந்தித்து பேசினர்.
சம்பவத்தன்று இரவு சமைத்த உணவில் மயக்க மருந்தைக் கலந்து திவ்யா, தனது பெற்றோர் மற்றும் சகோதரிக்குப் பரிமாறியுள்ளார். இதனால், மூவரும் மயக்கமடைந்தனர். இதனையடுத்து, விஜயராஜும், திவ்யாவும் ஊரை விட்டு ஓடினர்.
பிறகு, மயக்கம் தெளிந்த பிச்சாண்டி மற்றும் அவரது மனைவி மற்றும் மகள்,மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினர். அப்போது, வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் திவ்யா மாயமானது தெரியவந்ததை அடுத்து போலீஸில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட விசாரணையில், திவ்யா மற்றும் விஜயராஜ் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது தான் விருப்பப்பட்டே விஜயராஜை திருமணம் செய்துகொண்டதாகவும், பணம் நகை எதையும் எடுத்துச்செல்லவில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக திவ்யா வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications