உதவி பேராசிரியையை கத்தியால் குத்தி 6 பவுன் சங்கிலி கொள்ளை- வாலிபர் கைது
ராணிப்பேட்டை: ராணிபேட்டையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் நகைக்காக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை, சிப்காட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் வசிப்பவர் குணசேகர். இவர் எல்.ஐ.சியில் பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி புவனேஸ்வரி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
நேற்று மாலை புவனேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஒரு அந்நிய வாலிபர் அங்கு வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்ற புவனேஸ்வரியை தன்னிடம் இருந்த கத்தியால் குத்திவிட்டு அவருடைய 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார் அவ்வாலிபர்.
இதனால் அதிர்ச்சியும், காயமும் அடைந்த புவனேஸ்வரி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தப்பி ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கீழ் விசாரத்தை சேர்ந்த நாகூர்மீரான் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த பேராசிரியை புவனேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications