ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர் கைது
சேலம்: இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு, கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு. இவரது மகன் வெற்றிவேல் (31). கட்டிட கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பகல் சேலம் நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள நீதி தேவதை சிலை முன்பு நின்று கொண்டு தனது உடல் மீது தேசிய கொடியை போர்த்தியபடி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீர் எடுத்து வந்து வெற்றிவேல் மீது ஊற்றி தீ குளிப்பை தடுத்தனர். அவரிடம் சென்ற பொதுமக்கள், இப்படி செய்யலாமா என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, "மோடி பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள செயலை கடுமையாக எதிர்க்கிறேன். எனது எதிர்ப்பை வெளிக்காட்டும் நோக்கில் தீக்குளிக்கிறேன்" என்று வெற்றிவேல் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அஸ்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து வெற்றிவேலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications