ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர்.. “டேஞ்சர்”.. அலறி அடித்து ஓடிய போலீசார்.. விசாரணையில் ஷாக்!
திருப்பத்தூர் : ரயில்வே சிக்னலை உடைக்க முயன்ற இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் சிக்னலில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 1000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, 280க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த ரயில் விபத்தின் கடுமையான பாதிப்புக்கு சிக்னல் கோளாறே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னலில் இன்று திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (30) என்ற இளைஞர், குடிபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், ரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோகுலிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், கோகுல் குடிபோதையில் சிக்னல் கம்பத்தின் மீது கற்களை விசியது தெரியவந்துள்ளது. தனது காதலி தன்னிடம் பேசாமல் இருந்ததால், விரக்தியில் ஆத்திரமடைந்து ரயில்வே சிக்னல் கம்பத்தின் மீது கற்களை வீசியதாக கோகுல் தெரிவித்துள்ளார்.
சிக்னல் உடைக்கப்பட்டதை கவனிக்காமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டு சுமார் 280 பேர் பலியாகியுள்ள நிலையில், திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைப்பு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications