நீட் தேர்வில் சாதனை-மருத்துவ படிப்புக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் ஜீவித்குமார் தவிப்பு-கட்சிகள் உதவுமா?
தேனி: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் இடம்பெற்ற தேனி மாணவர் ஜீவித்குமார் தற்போது மருத்துவ படிப்புக்கு உரிய கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார். நீட் தேர்வில் அவர் கஷ்டப்பட்டு தேறி வந்து விட்டார்.. இப்போது அவரை படிக்க வைத்து அவருக்கு உதவ அனைத்துக் கட்சிகளும் இணைந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தேனி சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண்கள் பெற்றார். அப்போது இந்த மாணவரை நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுத்து வெற்றி பெற வைப்பதாக சமூக நீதிக்காக போராடும் ஆசிரியர் சபரிமாலா அறிவித்திருந்தார்.

மாணவர் ஜீவித்குமார்
இதனையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகள் பெற்று நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் ஜீவித்குமார் சேர்க்கப்பட்டார். தற்போது இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார் ஜீவித்குமார். மொத்தம் 720-க்கு 644 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். கடுமையான போராட்டத்தின் மூலமாக, பலரது உதவியால் ஒரு வைராக்கியத்துடன் படிக்க வைக்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதித்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

வறுமையில் பெற்றோர்
நீட் தேர்வில் என்னதான் சாதனை படைத்திருந்தாலும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்தக் கூடிய வருமானம் ஜீவித்குமாரின் பெற்றொருக்கு இல்லை. அவரது தந்தை கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் தொழிலை செய்கிறார்.. தாயாரோ 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிகிறார். இந்த சூழ்நிலையில் அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டணத்தை கூட ஜீவித்குமாரால் செலுத்த முடியாத வறுமையில் உள்ளார்.

ஜீவித்குமாருக்கு உதவ வேண்டும்
நீட் தேர்வை நியாயப்படுத்துகிறவர்களும் சரி.. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறவர்களும் சரி... தடைகள் பல தாண்டி மருத்துவப் படிப்பின் நுழைவாயிலை தொட்டுவிட்ட ஜீவித்குமாரை அரவணைத்து கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். இது ஏதோ ஒரு ஜீவித்குமாருக்கான உதவியாகவும் நின்று போய்விடவும் கூடாது.

மாணவர்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள் உதவி
அரசுப் பள்ளிகளில் இருக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து நீட் உள்ளிட்ட அத்தனை தகுதித் தேர்வுகளுக்கும் உரிய பயிற்சிகளை அளித்து அவர்களுக்கான நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டியது அரசு, அத்தனை அரசியல் கட்சிகளின் பெருங்கடமை. இதை ஒரு முன்னுதாரணமான செயல் திட்டமாக அரசும் அரசியல் கட்சிகளும் கையிலெடுத்தால் நல்லது. ஜீவித்குமாருக்கு மட்டுமல்லாமல் இவர் போல உள்ள பிற மாணவர்களுக்கும் கட்சிகள் இணைந்து கை கொடுக்கலாம்.. இதுதான் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications