கொந்தளித்த பாஜகவினர்.. 75 வயதில் கைது! 2K கிட்ஸ் மத்தியிலும் நெல்லை கண்ணன் பிரபலமானது எப்படி?
நெல்லை: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இடம்பெற செய்தது 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை.
Recommended Video
தமிழ்க்கடல் என்று அழைக்கப்படும் பிரபல தமிழ் பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லைக் கண்ணன் வயது மூப்பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று மதியம் காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டு முன்பாக 1946 ஆம் ஆண்டு பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தவர். சிறப்பான பேச்சாற்றல் மூலமாக பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்களில் பார்வையாளர்களை கட்டிப்போட்டவர். சரளமான இவரது அழகிய நெல்லை தமிழ் பேச்சை கேட்கவே அன்று பலர் காத்துக்கிடப்பார்களாம்.

அரசியல்வாதி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த நெல்லை கண்ணன், சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த நெல்லை கண்ணன் ஓராண்டிலேயே அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்...
இப்படி 90கள், 2000ங்களில் பரபரப்பான அரசியல்வாதியாகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த நெல்லை கண்ணன் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகளவில் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். இதனால் அடுத்த தலைமுறைக்கு நெல்லை கண்ணன் என்ற ஆளுமை இருப்பதே தெரியாமல் போனது. இந்த நிலையில்தான் கடந்த 2020 ஆம் ஆண்டு நெல்லை கண்ணன் ஆற்றிய உரை அவரை மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

சிஏஏ எதிர்ப்பு மாநாடு
கடந்த 2020 ஜனவரி மாதம் எஸ்டிபிஐ கட்சி நெல்லை மேலப்பாளையத்தில் நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தார். இந்த வீடியோவை பார்த்த பாஜகவினர் நெல்லை கண்ணன் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசிவிட்டதாக குற்றம்சாட்டி போலீசில் புகாரளித்தனர்.

கைது
அதன் தொடர்ச்சியாக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி சென்னை, நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லை கண்ணனை பெரம்பலூரில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இன்று நெல்லை கண்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு இணையத்தில் நெட்டிசன்கள் 2 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கண்ணன் ஆற்றிய உரையை நினைவுகூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications