நரபலி..நள்ளிரவு பூஜை..பலாத்காரம்! மடத்தில் துடித்த மாணவி! திடுக்கிட்ட திருவள்ளூர்! சிக்கிய முனுசாமி!
திருவள்ளூர் : நள்ளிரவு பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி மர்ம மரணம் தொடர்பாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சாமியார் பலாத்காரம் செய்து மாணவியை தற்கொலைக்குத் தூண்டியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமன நிலையில், போலீசாரால் சாமியார் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி
அவருடைய தாய் மாமாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடைய பெற்றோர்களுடன் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டையில் உள்ள ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வருவதாக இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அவரு கைய பார்த்து சாமியார் உனக்கு நாகதோஷம் இருப்பதாக மாணவிக்கு தெரிவித்து அவர் பெற்றோருக்கும் கூறி உள்ளார். அதனால் வாரத்திற்கு ஒருமுறை ஆசிரமத்திற்கு வந்து சென்றால் அதற்கான பரிகார பூஜைகள் செய்து நாக தோஷத்தை நீக்கப்படும் என கூறியுள்ளார்.

கல்லூரி மாணவி மரணம்
இதை நம்பி அவருடைய பெற்றோர்கள் கல்லூரி மாணவியை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளாக கல்லூரி மாணவி ஆசிரமத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நாகதோஷம் தீர்ப்பதாக நள்ளிரவு பூஜைக்கு சாமியார் முனுசாமி அந்தக் கல்லூரி மாணவியை அழைத்துள்ளார். அப்போது பிப்பிரவரி 14ஆம் தேதி மர்மமான முறையில் கல்லூரி மாணவி சாமியார் ஆசிரமத்தில் உள்ள வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை
இது தொடர்ந்து அவருடைய பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சாமியார் மற்றும் மாணவியின் குடும்பத்துடன் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர். அத்தகைய விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்றும் சந்தேகம் இருப்பதாகவும் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதிச்சி தகவல்
மேலும் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 26ஆம் தேதி காவல் துறை தலைமை இயக்குனர் சிபிசிஐடி விசாரணைக்கு விசாரணை மேற்கொள்ளும் உத்தரவிட்டிருந்தார். சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு மாதங்களாக மாணவி பெற்றோர் சாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வந்திருந்தனர்.

நள்ளிரவு பூஜை விவகாரம்
விசாரணை முடிவில் கல்லூரி மாணவிக்கு நாக தோஷம் இருப்பதாக அவர் பெற்றோருடன் பொய் சொல்லி நள்ளிரவு பூஜைக்கு அடிக்கடி ஆசிரமத்திற்கு வர வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டியது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததால் சாமியார் முனுசாமியை குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சாமியார் இதேபோன்று பல பெண்களை நரபலி கொடுத்து சாகடித்து இருப்பதாகவும் யாரும் சொல்வதற்கு முன் வரவில்லை மாணவியின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications