அடுத்த ஷாக்.. திருவள்ளூர் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.. மக்கள் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ளது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு விடுதி வசதியும் உள்ளது. இந்த பள்ளி விடுதியில் திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து அந்த மாணவி ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து காலை உணவுக்காக நண்பர்களுடன் உணவு அருந்த சென்ற பின்னர் அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

போலீஸார் விசாரணை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் மரணம் குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

காலையில் மரணம்?
மாணவி காலையிலேயே மரணமடைந்த நிலையில் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தாமதமாக தகவல் கூறியதாக உறவினர்களும் பெற்றோர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் "தங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்பதை மட்டும் பள்ளி நிர்வாகம் கூறியதாகவும் இறந்ததை கூறவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மறியல்
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் பெற்றோரும் உறவினர்களும், கிராம மக்களும் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து மறியல் நடத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணமடைந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் குவிப்பு
ஏராளமான கிராம மக்கள் கூடியுள்ளதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையிலும் போலீஸார் ஏராளமானோர் உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி விடுதியில் மரணமடைந்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய போது பள்ளியில் வன்முறை நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications