எம்.பி.யாகி முதன்முறையாக.. மேடையில் ஏறி சரசரவென தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா.. ஒரே நெகிழ்ச்சி
திருவண்ணாமலை: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
Recommended Video
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் 12 பேர் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்படுவது மரபு. கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இவ்வாறு நியமன எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில், நடப்பாண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இசைத்துறையில் அளப்பரிய பணிகளை செய்ததற்காக அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இளையராஜா மட்டுமல்லாமல் தடகள வீராங்கனை பி.டி. உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே, இளையராஜாவை எம்.பி.யாக நியமித்ததற்கு ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும் மறுபுறம் பெரிய அளவில் விமர்சனங்களும் எழுந்தன. எம்.பி.யாக இளையராஜாவை நியமிப்பதற்கு முன்பு அம்பேத்கர் அண்ட் மோடி என்ற நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியையும், சட்டமேதை அம்பேத்கரையும் அவர் ஒப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதன் தொடர்ச்சியாக, பாஜகவில் இளையராஜா இணையக்கூடும் என்பன போன்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இதுபோன்ற சூழலில் இளையராஜவுக்கு மாநிலங்களை எம்.பி. பதவி வழங்கப்பட்டதால் கூடுதலாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த விமர்சனங்களை இளையராஜா பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார்.

தேசியக் கொடி ஏற்றினார்
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்திற்கு எம்.பி. இளையராஜா இன்று காலை வருகை தந்தார். ரமணர் ஆசிரமத்திற்கு அவர் அவ்வப்போது வந்து தியானம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று அங்கு வந்த இளையராஜா ரமணர் ஆசிரமத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். எம்.பி.யான பின்னர் இளையராஜா தேசியக்கொடியை ஏற்றுவது இதுவே முதன்முறை ஆகும் , .
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications