திருவாரூர் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா... பறிபோன 2 உயிர்கள் - சரிந்து விழுந்த தூணால் அபசகுனமா?
தியாகராஜர் கமலாலய குளத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததால் அபசகுனமாக கருதப்படுகிறது.
திருவாரூர்: தியாகராஜர் கமலாலய குளத்தில் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலே இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 அடி உயர அலங்காரத்தூண் சரிந்து விழுந்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட விழா கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனுடன் மற்றொரு சிறப்பம்சமாக தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கமலாலய குளத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது.

தெப்பத்தில் மூழ்கி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலூன் விற்க வந்த சிறுமி முஸ்கான் மற்றும் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் குளத்தில் குளிக்க செல்லும் பொழுது நீரில் மூழ்கி உள்ளார்கள் தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அதில் தீயணைப்பு வீரர்கள் சிறுமி முஸ்கான் உடலை சடலமாக மீட்டனர். ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் உடலை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சரிந்து விழுந்த தூண்
நேற்று நடைபெற்ற தெப்பத் திருவிழாவிற்கு தெற்கு கரையில் தென்மேற்கு பகுதியில் குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஒரு அலங்கார தூண் 15 அடி உயரம் சரிந்து விழுந்தது நல்லவேளையாக தெப்பத்தின் மீது விழவில்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவில் திருவிழாக்களில் உயிரிழப்பு
கடந்த மூன்று மாத காலமாக கோவில் திருவிழாக்களில் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவி போது கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்ததால் விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது.

களிமேடு தீ விபத்து
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்றது. ஊர்வலம் முடிந்து வளைவில் திரும்பும் போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 12 பேர் உயிரிழந்தனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி மரணம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேரோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்றது. தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்ற தொழிலாளி தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கமலாலய தெப்பக்குளம்
திருவாரூர் என்றாலே தனித்துவமான அடையாளம் தியாகராஜர் ஆலயம். கோயிலுக்கு இணையான புகழ்பெற்றது கமலாலயம் என அறியப்பட்ட தெப்பக் குளம். தெப்பக்குளம் ஐந்து ஏக்கர் பரப்பு உள்ளது. அந்தத் தெப்பக்குளத்தில் வழுக்கி விழுந்து இறந்தவர்கள் பல பேர். தெப்பத்திருவிழா நடைபெறும் சமயத்தில் இரண்டு பேர் தெப்பக்குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 15 அடி தூண் ஒன்றும் சரிந்து விழுந்தது அபசகுனமாக கருதப்படுகிறது. எனினும் தெப்பத்திருவிழா குறிப்பிட்டது போல நடந்து முடிந்துள்ளது. திருவிழா நடந்த நேரத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications