திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் பலியான சம்பவம்.. விசாரிக்க 3 குழுக்கள் அமைப்பு
திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயா கெட்டு போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வினித் ஐஏஎஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அது போல் திருப்பூர் மாவட்ட காவல் துறை ஆணையர் பிரபாகரனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு 3 குழுக்களை அமைத்துள்ளது.
சமூகநலத்துறை சார்பில் ஒரு குழுவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையிலான குழு விடுதியில் விசாரணை நடத்தி வருகிறது. வளர்மதி தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications