திருப்பூரை உலுக்கிய மூவர் கொலை! சைக்கிளில் தப்பிய ’சைக்கோ’ கொலையாளி! கடைசியில் நிலைமைய பாத்தீங்களா?
திருப்பூர் : திருப்பூர் அருகே தாயையும் இரு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிய வடமாநிலத்தை சேர்ந்த சைக்கோ கொலையாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தண்ணீர் இல்லாத பாழுங்கிணத்தில் விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் நெருப்பெருச்சல் அருகே கடந்த 23 ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் அடித்து கொலை செய்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளி தான், தற்போது தண்ணீர் இல்லாத கிணற்றில் சைக்கிளுடன் விழுந்து இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே வீட்டில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் மற்றும் நித்தீஷ் ஆகியோருடன் குடியேறியுள்ளார்.

மூவர் கொலை
கடந்த 23 ஆம் தேதி வீட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது . உடனடியாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சைக்கோ கொலையாளி
சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாபு தலைமையில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலையில் சம்பந்தப்பட்ட அப்பெண்ணுடன் தங்கியிருந்த நபர் தான் கொலை செய்திருப்பார் என முடிவுக்கு வந்து , அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது காங்கேயம் படியூர் அருகே தண்ணீர் இல்லாத 80 அடி கிணற்றில் சைக்கிளுடன் இறந்த நிலையில் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கிணற்றில் விழுந்து மரணம்
பின்னர் காங்கேயம் தீயணைப்பு துறை அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிரேன் மூலம் கிணற்றில் இறங்கி சடலத்தையும் அவர் ஓட்டிவந்த சைக்கிளையும் மேலே எடுத்தார். பிரேதத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு திருப்பூர் கமிஷனர் பாபு நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் தற்கொலை செய்துகொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

பெரும் பரபரப்பு
இவர் ஏற்கனேவே பெண்ணை கொலைசெய்துவிட்டு 2020 ஆண்டு கொலை வழக்கில் இருந்து விடுதலை ஆனவர் என்றும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.மேலும் கடந்த 9 நாட்களாக சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருப்பூர் மாநகர காவல்துறையினர்,நல்லூர் மற்றும் காங்கேயம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் சைக்கிள் சைக்கோ கொலைகாரன் தற்கொலை செய்துகொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications