Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் பொதுச் செயலாளராக தங்கமணி நாடகம் போட்டாரு! போட்டுடைத்த திண்டுக்கல் சீனிவாசன்! நெளிந்த ‘மாஜி’

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவுடன் கூட்டணி வருவதற்கு பிற அரசியல் கட்சிகள் 100 கோடி ரூபாய் கேட்பதாக பேசியது அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளராக்க தங்கமணி நாடகம் போட்டார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அந்தக் கட்சிக்குள்ளேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் கள ஆய்வுக் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

dindigul srinivasan edappadi palaniswami thangamani

அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

அந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறிய சிறிய அரசியல் கட்சிகள் கூட 20 சீட்டு, 100 கோடி ரூபாய் எனக் கேட்கிறார்கள் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் மற்றொரு பேச்சு அதிமுகவுக்குள்ளேயே பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அப்படி என்னதான் பேசினார் என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ''அந்த நேரத்தில் சசிகலா தான் அடுத்த முதல்வர் என்ற செய்தி பரப்பப்பட்டது. ஆனால் சசிகலா 4 வருடம் சிறைக்குச் செல்ல போகிறார் என்ற செய்தி வந்தது. அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வேண்டும் என கடவுள் உத்தரவு போட்டார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உத்தரவிட்டார்கள்.

ஆனால் வயது வித்தியாசப் படி பொன்னையன் தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் கடவுள் அருளால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்பதற்காக தங்கமணி நாடகங்கள் நடத்தினார். அதற்கு பிறகு அவரே புரிந்து கொண்டு இப்போது எடப்பாடி பழனிச்சாமி உடன் சிறப்பாக பயணித்து வருகிறார். தினம் தினம் முதலமைச்சர் ஆவதற்கு பல திட்டங்களை ஓபிஎஸ் போட்டார். எல்லாமே வீணாகிப் போய்விட்டது.

திடீரென்று ஒரு நாள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டும் என தங்கமணி போன்றவர்கள் என்னிடம் சொன்னார்கள். அப்போதுதான் கட்சியும் நன்றாக இருக்கும் என்றார்கள். அதற்கு அப்புறம் என்ன நடந்தது. எடப்பாடி தான் கட்சியின் தலைமையாக உருவெடுத்துள்ளார்" என்றார்.

திண்டுக்கல் சீனிவாசன் இப்படி அதிரடியாக பேசிக் கொண்டிருக்க கடந்த காலங்களில் நடந்ததை வைத்து நம்மை மாட்டி விடுகிறாரே என மேடையிலேயே நெளிந்தார் தங்கமணி. வழக்கமாக திண்டுக்கல் சீனிவாசன் மேடைகளில் ஏதாவது ஒன்றை பேசி பரபரப்பு கிளப்பி விடுவது வழக்கம். அது அந்த கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் மேடையில் தங்கமணியை வைத்துக் கொண்டே அவரை மாட்டி விடுவது போல திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+