ராமஜெயம் கொலை வழக்கு: பொதுமக்கள் தகவல் கொடுத்தால் பரிசு - சிறப்பு புலனாய்வுக்குழு அறிவிப்பு
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால், பொதுமக்கள் இமெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு பொதுமக்களிடம் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இமெயில், செல்போன்கள் மூலம் தகவல் செல்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் மார்ச் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. குற்றவாளி யார் என்றும் எதற்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு துரும்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என பலர் விசாரித்தாலும் ராமஜெயம் யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கொலையாளி யார்
கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை. ராமஜெயம் காலையில், வாக்கிங் செல்லும் போது கடத்தப்பட்டாரா என்பது தான் மிகப்பெரிய சந்தேகம். ராமஜெயம் தூங்கி கொண்டிருந்த போது, வெளியில் இருந்து சிலர் அழைத்துள்ளனர்.வெறும் கைலி மட்டும் கட்டியதோடு ராமஜெயம் வெளியே வந்திருக்கிறார், எனவே தெரிந்த நபர்களே இந்த கடத்தல் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இன்று வரை உள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. ராமஜெயத்திற்கு நெருக்கமானவர்களை அழைத்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எந்த துப்பும் கிடைக்காமல் கிறுகிறுத்து போனார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை
தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரித்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

திருச்சியில் முகாம்
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பத்து ஆண்டுகள் நிறைவு
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சென்னையில்உள்ள சிபிஐ அலுவலகத்திலிருந்து, இவ்வழக்கு குறித்த ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருச்சிக்கு வந்து, மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் வீடு அமைந்துள்ள பகுதி, அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோட்டை ஸ்டேஷன் சாலை, கொலை செய்யப்பட்டு கிடந்த திருவளர்ச்சோலை பகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தகவல் சேகரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விசாரணையை பல்வேறு கோணங்களில் மேற்கொள்வதற்காக பிரதான குழுவின் கட்டுப்பாட்டின்கீழ், பல தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழுவானது பொதுமக்களிடம் தகவல் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

தகவல் அளித்தால் சன்மானம்
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால், பொதுமக்கள் கீழ்கண்ட ஈ.மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்தவும். என அறிவிக்கப்பட்டுள்ளது. [email protected] Sit காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 9080616241 Dsp மதன் 9498120467, 7094012599 தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மம் விலகுமா
ராமஜெயம் கொலைக்கான மர்மம் பத்தாண்டு காலமாக விலகவில்லை. மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கொடூர கொலைக்கான காரணத்தையும், கொலையாளி யார் என்பதையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்து கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பத்தாண்டு கால கொலை வழக்கில் மர்மம் விலகும். விடை கிடைக்குமா? மர்மம் விலகுமா என்பது அந்த ஸ்ரீரங்கநாதருக்கே வெளிச்சம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications