திருச்சி என்ஐடியில் ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பிரதமரின் திட்டம் அறிமுகம்
திருச்சி: என்ஐடி கல்லூரியில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவது என்ஐடிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என அதன் இயக்குநர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவில் தலைசிறந்த ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை ஊக்குவிப்பதோடு அவர்களின் கண்டுபிடிப்புகளையும் மேம்படுத்தும் விதமாக கடந்த 2018-2019-ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆராய்ச்சி கூட்டுறவு திட்டம் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்இ மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி என்ஐடி கல்லூரிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ரூ 70 ஆயிரமும் 3ஆம் ஆண்டுக்கு ரூ 75 ஆயிரமும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு ரூ 80 ஆயிரமும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்கள் கடுமையான தேர்ந்தெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஆண்டுதோறும் தேசிய ஒருங்கிணைப்பு குழு மூலம் இவர்களது பணிகள் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே உதவித் தொகைகள் வழங்கப்படும். இது என்ஐடிக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் என அவர் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications