ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. 3 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய காட்சி- வீடியோ
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்ததால் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர் மட்டம் கடந்த வாரம் 48 அடியை எட்டியது. இதன் முழு கொள்ளளவு 62 அடியாகும்.
இந்த நிலையில் இந்த அணைக்கு நேற்று இரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் 58 அடியானது. எனவே அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி உபரி நீரை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தார்கள்.

செண்பகத்தோப்பு அணை
அதன்படி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு செண்பகத்தோப்பு அணையின் 7 ஷட்டர்கள் திறக்கப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறக்கப்பட்டதால் ராமநாதபுரம், மல்லிகாபுரம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழந்தது.

வெள்ளப்பெருக்கு
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வழியின்றி தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளப்பெருக்கால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆரணி ஆறு
திருவண்ணாமலை மாவட்டம் பாயும் துணை நதி கண்டல நாகநதியாகும். இது ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக செல்கிறது. ஆரணி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது ஆரணி வழியே பாயும் ஆற்றிலும் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.
|
மக்கள் ஆர்வம்
இதை பார்க்க ஆரணி பாலத்தின் மீது மக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கண்ணமங்கலம் அருகேயும் பாயும் இந்த ஆறு கடைசியாக 2017-இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்தோடு இப்போது ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications